/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒரு கிலோ கஞ்சா பதுக்கல்: 2 பேர் கைது
/
ஒரு கிலோ கஞ்சா பதுக்கல்: 2 பேர் கைது
ADDED : ஜன 22, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த், 31; கம்மாபுரம் அடுத்த பெருந்துறை தெய்வகண்ணு மகன் மணி, 24, ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.