/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி
/
மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி
ADDED : டிச 16, 2025 04:04 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் சந்தனராஜ், 58; இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி நோக்கி சென்றார்.
அண்ணா பாலத்தில் சென்றபோது அதே திசையில் வந்த டிப்பர் லாரி, சந்தனராஜ் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது.
இதில், சந்தனராஜ் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் கும்பகோணம், பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

