ADDED : அக் 25, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: வாய்க்காலில் விழுந்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம், வடக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் மணி, 55; இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கால்நடைகளை மேய்க்கும் பணியில் இருந்தார்.
அப்போது பெருமாள் ஏரிக்கரை அருகே கால் தவறி அங்குள்ள வடிகால் வாய்க்காலில் விழுந்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மணி கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

