/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி
/
பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி
ADDED : செப் 22, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இன்று அரை நாள் மட்டுமே படகு சவாரி இயங்கும் என சுற்றுலா அலுவலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று (22ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே படகு சவாரி செயல்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.