/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கயிலை மாசிலாமணி தேசிகர் கட்டளை மடம் திறப்பு விழா
/
கயிலை மாசிலாமணி தேசிகர் கட்டளை மடம் திறப்பு விழா
ADDED : நவ 29, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் மணிவிழா நிலையம் முகப்பு கோபுர கும்பாபி ேஷகம் மற்றும் திறப்பு விழா நடந்தது.
இதில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, கட்டளை மடத்தை திறந்து வைத்தார்.
இதில், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், கழுதுார் வெங்கடேஸ்வரா கல்விக்குழும தாளாளர் வெங்கடேசன், கே.எஸ்.ஆர்., பள்ளி தளாளர் சுந்தரவடிவேல் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.