/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு
/
சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு
ADDED : அக் 11, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த பத் திரக்கோட்டை கிராமத்தில் ரூ.30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டட திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி தலைமை தாங்கினார்.
நெய்வேலி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார்.
பண்ருட்டி முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன், ஊராட்சி செயலாளர் நடராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தெய்வமூர்த்தி, முருகன், கலைச்செல்வன், கிளை செயலாளர்கள் கண்ணுசாமி, தட்சிணாமூர்த்தி, சுரேஷ் மணிவாசகன், ஏழுமலை, பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.