/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
/
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஏப் 26, 2025 06:31 AM

கடலுார் : கடலுார், தேவனாம்பட்டினத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார், தேவனாம்பட்டினம் சுனாமி நகர் பகுதியில், புதிய பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடக்கிறது. சுத்திகரிப்பு மையம் அமைத்தால் நோய்கள் உருவாகும் எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரவித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இப்பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று 6:00 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.