/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு
/
விபத்தில் இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு
விபத்தில் இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு
விபத்தில் இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு
ADDED : ஏப் 19, 2025 06:36 AM
கடலுார்; கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த தில்லைநாயகபுரம் கீழ்மூங்கிலடியைச் சேர்ந்தவர் செல்வம். சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு, டிசம்பர் 2ம் தேதி காரில் தனது மனைவி ஸ்ரீதேவி பிரியா, மகள் ஜனனிஸ்ரீயை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலம் பண்ணாரி மெயின்ரோட்டில் புதுவடவள்ளி பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி மோதி மூன்று பேரும் அதே இடத்தில் இறந்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இறந்த சப்இன்ஸ்பெக்டர் செல்வத்தின் தாய் சகுந்தலா மற்றும் தந்தை முனுசாமி ஆகியோர், கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலுார் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்.1ல் நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இறந்த செல்வம் குடும்பத்தாருக்கு, செல்வம் இறந்த வழக்கிற்கு மட்டும் ஒருகோடியே ஒருலட்சத்து 19ஆயிரம் மற்றும் 7.5சதவீத வட்டியுடன் சேர்த்து ஒருகோடியே 40லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார்.

