ADDED : செப் 18, 2026 03:43 PM
வேப்பூர், செப். 19-
நல்லுார் ஒன்றிய வேளாண்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்து வலசை கிராமத்தில் பயிற்சி முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். விருத்தாசலம், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கமலக்கண்ணன், வேளாண் உதவி அலுவலர் தினேஷ் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், குமரேசன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பது, மானியத்தில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், விவசாயி கணேசன், பஞ்சகாவியா ஜீவாமிர்தம், அமிர்த கரைசலை தயாரித்து செயல் விளக்கம் அளித்தார். மேலும், இயற்கை முறையில் ஐந்திளை கரைசலை தயாரித்து பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
