sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்

/

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்


ADDED : செப் 09, 2025 07:39 AM

Google News

ADDED : செப் 09, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு; பெரியநற்குணம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் காலனி தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தொட்டியில் ஆங்காங்கே சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், மேல்நிலை தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் நடப்ப தற்கு முன் தொட்டியை அகற்ற விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us