/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவிகளுக்கு பஞ்சகாவ்யா பயிற்சி
/
வேளாண் மாணவிகளுக்கு பஞ்சகாவ்யா பயிற்சி
ADDED : பிப் 04, 2026 06:59 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகளுக்கு பஞ்சகாவ்யா தயாரிப்பு குறித்து செலய்விளக்கம் அளிக்கப்பட்டது.
இயற்கை விவசாயி ராமதாஸ் பஞ்சகாவ்யா தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை பேராசிரியர் தமிழ்செல்வி, பேராசியர் சண்முகராஜ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கள அலுவலர் பாலமுருகன், இயற்கை மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பஞ்சகாவ்யா திரவத்தால் பயிர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள் குழு தலைவி அபிரூபா, அபிநயா, ஆதனா, அபிநயா உள்ளிட்ட 9 மாணவிகள் பயிற்சி பெற்றனர். முன்னாள் ஊராட்சி துணை தலைவர் சுகுமார் உடனிருந்தார்.

