/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி நகராட்சி திட்டப்பணிகள்: நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு
/
பண்ருட்டி நகராட்சி திட்டப்பணிகள்: நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு
பண்ருட்டி நகராட்சி திட்டப்பணிகள்: நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு
பண்ருட்டி நகராட்சி திட்டப்பணிகள்: நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு
ADDED : அக் 26, 2025 10:52 PM

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன்ரெட்டி, கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் நேற்று நகராட்சி பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட சாலை, குடிநீர், வடிகால் வசதிகள் உள்ளிட்ட திட்ட பணிகள் ஆய்வு செய்தனர்.
லட்சுமிபதிநகரில் ரூ.219 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும், குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளாக லட்சுமிபதி நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பண்ருட்டி பஸ்நிலையம் ரூ.470 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கடைகளுடன் மேம்படுத்துதல் பணி, ரூ.582 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி காய்கறி மார்க்கெட் பணிகள் துவங்குவது குறித்தும். ரூ.500 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தினைத் தேர்வு செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் பஸ்நிலைய ஒப்பந்த பணிகள் துவங்கி ஓர் ஆண்டாகியும் பணி முடிக்காத ஒப்பந்ததாரரை எச்சரித்தனர். பின் பண்ருட்டி காய்கறி மார்க்கெட் பணிகள் கோர்ட் தடை காரணமாக துவங்காமல் உள்ளதை உடனடியாக கோர்ட் தடை நீக்கி பணிகள் துவங்கி அதிகாரிகள் உத்திரவிட்டனர்.
இதில் இணை இயக்குநர் லட்சுமி, கமிஷ்னர் காஞ்சனா, , உதவி பொறியாளர் கார்த்திகேயன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

