ADDED : ஜூன் 16, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 56ம் ஆண்டு திருவிழாவையொட்டி கோவில் எதிரில் உள்ள அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மன் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேள தாளங்கள் முழங்க அம்மன் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார்.