/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயணியர் நிழற்குடை : எம்.எல்.ஏ., திறப்பு
/
பயணியர் நிழற்குடை : எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : பிப் 04, 2026 07:06 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சின்னாண்டிக்குழி கிராமத்தில் சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மே ம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்ட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் முன்னிலை வகித்தனர். பயணியர் நிழற்குடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வம், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அகிலநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.
அய்யப்பன் நன்றி கூறினார்.

