sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

/

குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூன் 02, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த புலியூர் ஊராட்சி, கன்னியங்குப்பம் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கலங்கலான நிலையில் தண்ணீர் வந்துள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து, விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகத்தை நேற்று மதியம் 1.00 மணிக்கு கிராம மக்கள் 25க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். இவர்களை பி.டி.ஓ.,க்கள் சங்கர், லட்சுமி, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us