தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கல் கடத்தியவர் கைது: சுரங்க துறை அதிகாரிகள் அதிரடி

கூழாங்கல் கடத்தியவர் கைது: சுரங்க துறை அதிகாரிகள் அதிரடி

கூழாங்கல் கடத்தியவர் கைது: சுரங்க துறை அதிகாரிகள் அதிரடி


UPDATED : செப் 07, 2026 11:24 PM

ADDED : செப் 07, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 11:24 PM ADDED : செப் 07, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்:மினி லாரியில் கூழாங்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் கனிம வளம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வேப்பூர் கூட்டுரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த டி.என். 28 பிகே 8280 பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

அதில், விருத்தாசலம் அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அருள்தாஸ், 23; என்பதும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மினிலாரியை பறிமுதல் செய்து டிரைவர் அருள்தாசுடன் சேர்த்து வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அருள்தாசை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us