/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : பிப் 06, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் நேற்று காட்டுக்கூடலுார் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

