ADDED : பிப் 06, 2026 06:18 AM
கடலுார்: சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுவன் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 18வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமி. சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் வரும் போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம், சிறுமியை காதலிப்பதாக கூறி, பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த சிறுவனின் தாயார், கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிறுமி பரிசோதனைக்கு வந்த போது கர்ப்பம் எனத்தெரிந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மற்றும் அவரது தாய் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

