/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல்: வாலிபர் கைது
/
கூழாங்கற்கள் கடத்தல்: வாலிபர் கைது
ADDED : டிச 22, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: டிப்பர் லாரியில் கூழாங்கற்கள் கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஆலடி சாலை வழியாக வந்த, டிப்பர் லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அதில் 3 யூனிட் கூழாங்கற்கள் அனுமதியின்றி கடத்தி செல்வது தெரிந்தது.
இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரி டிரைவர் பூண்டியாங்குப்பம் கேசவன் மகன் சிவக்குமார், 34; என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

