ADDED : பிப் 03, 2026 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூத்த உறுப்பினர் தனசேகரன் தலைமை தாங்கினார். வட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். துணை தலைவர்கள் தனசேகரன், லட்சுமிகாந்தன், ராசாகண்ணு முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் பழனி, வட்ட செயலாளர் மனோகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயலாளர் பழனி கண்டன உரையாற்றினார். 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

