sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தாலுகா அலுவலகத்தில்  மக்கள் அவதி

/

 தாலுகா அலுவலகத்தில்  மக்கள் அவதி

 தாலுகா அலுவலகத்தில்  மக்கள் அவதி

 தாலுகா அலுவலகத்தில்  மக்கள் அவதி


ADDED : நவ 19, 2025 08:10 AM

Google News

ADDED : நவ 19, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

திட்டக்குடி தாலுகாவில், 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு சான்றுகள் பெறவும், ஆதார் திருத்தம், பொது வினியோக திட்ட பணிகள், நில அளவை உட்பட பல்வேறு தேவைகளுக்காக தினசரி தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர்.

மேலும், தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம், இ - சேவை மையமும் செயல்படுகின்றன. திட்டக்குடியிலிருந்து 30 கி.மீ., தொலைவில் இருந்து பொதுமக்கள் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தினசரி வந்து செல்லும் நிலை உள்ளது.

தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், குடிநீர், பொது கழிவறை இல்லாமல் மக்கள் சிரமம் அடைகின்றனர். குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அதனால், தாலுகா அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us