sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பீச்சில் குவிந்த மக்கள்

/

பீச்சில் குவிந்த மக்கள்

பீச்சில் குவிந்த மக்கள்

பீச்சில் குவிந்த மக்கள்


ADDED : ஏப் 21, 2025 06:08 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் வெயிலின் தாக்கத்தை தணிக்க, சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வுநிலை திசை மாறியதால் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக கடலுார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 12ம் தேதி கடலுார் மாவட்டத்தில் வெப்பநிலை 102.56 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

இதன் காரணமாக பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் கடும் அவதியடைந்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலுார் சில்வர் பீச்சில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பொழுதை கழித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us