ADDED : பிப் 17, 2026 05:27 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நார்த்தங்குடி - சேதியூர் விளாகம் சாலை ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த நார்த்தங்குடி கிராமத்திலிருந்து தரசூர், சேதியூர், விளாகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை வழியாக மினி பஸ், அரசு டவுன் பஸ்கள், அவசரத்தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், தனியார் பள்ளி வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. கடந்த 5 ஆண்டிற்கு முன்பு போடப்பட்ட சாலை பழுதடைந்து ஜல்லிகள் குண்டும் குழியுமாக மாறியது.
இதனால் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பைக்கில் வெளியூர் சென்று திரும்பும் மக்கள் குண்டும் குழியுமான சாலையில் விழுந்து காயமடைகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

