/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியப்பட்டு பிரித்தியங்கரா கோவில் கும்பாபிஷேகம்
/
பெரியப்பட்டு பிரித்தியங்கரா கோவில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 14, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : பெரியப்பட்டு பிரித்தியங்கரா தேவி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலில், கடந்த 12ம் தேதி காலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு விசேஷ பூகைகள், யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. கும்பாபிேஷக தினமான நேற்று, காலை 6:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
9:.45 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.