sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபர் கைது

/

ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபர் கைது

ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபர் கைது

ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபர் கைது


ADDED : மார் 23, 2025 10:52 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த இடையான்பால்சொரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 55; ஊராட்சி எழுத்தர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ், 38. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அடிதடி வழக்கு ஒரத்துார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த 19ம் தேதி குமார் தனது மனைவி கவிதாவுடன் சிதம்பரம் பஸ்சில் சென்று பைபாஸ் பஸ்நிறுத்தத்தில் இறங்கியபோது, அங்கு வந்த சிவராஜ் குமாரிடம் தகராறு செய்தார்.

இதனால் மனமுடைந்து குமார் தனது தற்கொலைக்கு சிவராஜ் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 20ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்தார்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தினை ஒரத்துார் போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிந்து தற்கொலைக்கு காரணமான சிவராஜை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us