UPDATED : ஆக 01, 2026 09:43 PM
ADDED : ஆக 01, 2026 09:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்:கடலுார் மாவட்ட போலீஸ் அலுவலக கூட்டரங்கில் நேற்று பெட்டிஷன் மேளா நடந்தது. எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மனு அளிக்க வந்தவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் எஸ்.பி., அவரது இருக்கைக்கே சென்று மனுவை பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி., தினேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
