ADDED : நவ 27, 2025 04:51 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடந்தது.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நேரடி விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து புகார் மனுக்கள் மீது போலீஸ் அதிகாரிகள் மேல்நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்றனர்.
