ADDED : ஜூன் 10, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
கடலுார்: விருத்தசாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில், விருத்தாசலம் அடுத்த எடையூர் கிராம மக்கள் அளித்த மனு:
எடையூர் கிராமத்தில் காமராஜர் நகர், அண்ணா நகர், புதிய காலனி பகுதியில் 250க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, தனி நபர் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் மக்களுக்கு இடையூறா உள்ளது. எனவே உடன் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
