sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓட்டல்களில் பார்சலுக்கு 'பிளாஸ்டிக்' : கலெக்டர் எச்சரிக்கை

/

ஓட்டல்களில் பார்சலுக்கு 'பிளாஸ்டிக்' : கலெக்டர் எச்சரிக்கை

ஓட்டல்களில் பார்சலுக்கு 'பிளாஸ்டிக்' : கலெக்டர் எச்சரிக்கை

ஓட்டல்களில் பார்சலுக்கு 'பிளாஸ்டிக்' : கலெக்டர் எச்சரிக்கை


ADDED : நவ 06, 2025 05:25 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: உணவு பொருட்களை பார்சல் செய்ய கருப்பு மற்றும் வெள்ளை நிற தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மறு சுழற்சி செய்யமுடியாத, சுற்றுப்புற சூழல் மற்றும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, பிளாஸ்டிக் பொருட்களை வணிகர்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர் நடவடிக்கையாக கடலுார், நெல்லிக்குப்பம், வடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 86 உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தரமற்ற கருப்பு மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 9 உணவகங்களிலிருந்து 7.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதமாக 12, ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு உணவு பொருட்களை பார்சல் செய்ய கூடாது.

பொதுமக்களுக்கு சுகாதார சீர் கேடு ஏற்படும் வகையில் மீறி தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை உணவகங்களில் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் உணவு பொருள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us