/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு மைதானம் டி.ஆர்.ஓ., ஆய்வு
/
விளையாட்டு மைதானம் டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : டிச 25, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: மினி விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., ஆய்வு நடந்தது.
பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து, டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், தாசில்தார் பிரகாஷ், தலைமை சர்வேயர் திருமலை, துணை தாசில்தார் கரிகாலன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் பழனி, என்.சி.சி.அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் இறகுபந்து, பூப்பந்து, உடற்பயிற்சிக்கூடம் ஆகியவை அடங்கிய, உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

