sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விளையாட்டு மைதானம்; அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

/

 விளையாட்டு மைதானம்; அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

 விளையாட்டு மைதானம்; அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

 விளையாட்டு மைதானம்; அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 20, 2025 05:49 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: அரசுப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பெண்ணாடம் அடுத்த வடகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 195 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் வடகரை, நந்திமங்கலம், கோனுார், அருகேரி, எரப்பாவூர் உட்பட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து, படிக்கின்றனர். இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை.

இதனால், விளையாட்டுத்துறை சார்பில் குறுவட்ட, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் நிலையில், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, இப்பகுதி கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசு மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அதனால், வடகரை அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள னர்.






      Dinamalar
      Follow us