ADDED : ஜன 23, 2026 06:46 AM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி பா.ம.க., நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் கவு ரிசங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பண்ருட்டி தொகுதியில் இருந்து, 1000 பேர் கலந்து கொள்வது; அனைத்து கிராமங்களிலும் கிளை கூட்டம் நடத்துவது; ஓட்டுச்சாவடி கள பணியாளர்கள் நியமிப்பது; என்பன உள் ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நந்தல், விநாயகமூர்த்தி, மாநில அமை ப்பு தலைவர் ஹரிராமன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் அக்பர் அலி, ஒன்றிய செயலாளர்கள் மோகன், பிரேம்குமார், கலியபெருமாள், அய்யப்பன், சதாசிவம் நகர செயலாளர்கள் ஆனந்த், ரவி, நகரதலைவர் ஜெய் வீரன், மாவட்ட மாணவர் சங்க தலைவர் சுபாஷ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

