ADDED : ஏப் 15, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி அருகே 17 வயதுடைய சிறுமியும், சேத்தியாத்தோப்பு அருகே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் காதலித்துள்ளனர். இதில் இருவரும் நெருங்கி பழகியதில், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை உறவினர்கள் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனையில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவ மனை நிர்வாகத்தின் தகவலின் பேரில், மருதுார் போலீசார் சிறுமியிடம் விவசாரனை நடத்தினர்.
அதன் பேரில் மருதுார் போலீசார் சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.