ADDED : அக் 17, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: குடிநீர் தொட்டி அருகில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
மேல் புவனகிரி ஒன்றியம், மருதூரில் குடிநீர் தொட்டி அருகில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்ததால் அப்பகுதி செல்பவர்கள் மற்றும் தண்ணீர் பிடிக்க வந்தவர்கள் கடும் பாதிப்படைந்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் குடிநீர் தொட்டி அருகிலிருந்த விஷ வண்டுகளை தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.