sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மழைநீர் தேங்கியதால் தகராறு 9 பேர் மீது போலீசார் வழக்கு

/

மழைநீர் தேங்கியதால் தகராறு 9 பேர் மீது போலீசார் வழக்கு

மழைநீர் தேங்கியதால் தகராறு 9 பேர் மீது போலீசார் வழக்கு

மழைநீர் தேங்கியதால் தகராறு 9 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : அக் 25, 2025 07:46 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே வீட்டின் முன் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட தகராறில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் மேற்குதெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்,50;அதே பகுதி யை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்,32; ஆறுமுகம் தமது வீட்டின் எதிரில் மண் கொட்டி வைதிருந்தார். தற்போது பெய்து வரும் மழைநீர் ஜெயபிரகாஷ் வீட்டு முன் தேங்கியதால், ஜெயபிரகாஷ்,ஆறுமுகத்தினை ஆபாசமாக திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், இவரது தம்பி பிரசாந்த், உறவினர்கள் ரமேஷ், சதீஷ், தமிழ்செல்வன் ஆறுமுகத்திடம் தகராறு செய்தனர். தகவலறிந்த ஆறுமுகத்தின் மகன் பார்த்திபன்,தம்பி கனகசபை, இவரது மகன்கள் கார்த்திகேயன், சரவணன் ஆகியோர், ஜெயபிரகாஷிடம் தகராறு செய்து,ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இ தில் பலத்த காயமடைந்த ஆறுமுகம்,ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் ஆறுமுகம்,ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில், போலீசார் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us