ADDED : செப் 27, 2025 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு, குமளங்குளம், கொடுக்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்பு ணர்வு கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெ க்டர் செபஸ்டின், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கல்பனா, விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சமூக நீதி குறித்தும், மனித உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில்பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.