ADDED : ஏப் 26, 2025 06:35 AM

கடலுார் : கடலுார், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கடலுார்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு விபூதி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
திட்டக்குடி
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம்; 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம்
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் வெள்ளி கவச உடை அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.