/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சந்திர மவுலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு
/
சந்திர மவுலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு
ADDED : ஜூன் 24, 2025 07:07 AM

திட்டக்குடி: புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர மவுலீஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர மவுலீஸ்வரருக்கு பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.