/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சந்திரமவுலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு
/
சந்திரமவுலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு
ADDED : மார் 28, 2025 05:26 AM
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணிக்கு பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.