sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கர்ப்பிணி மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்

/

கர்ப்பிணி மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்

கர்ப்பிணி மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்

கர்ப்பிணி மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்


ADDED : ஏப் 19, 2025 06:40 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; மருதுார் அருகே வீட்டில் இருந்த கர்ப்பிணி மனைவியை காணவில்லை, என அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். .

புவனகிரி தாலுகா, மருதுார் அருகே கஸ்பா ஆலம்பாடி வள்ளலார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் நடேசன் மகன் முரளிதாஸ்,29; தனியார் நிறுவன ஊழியர்.

இவருக்கும், காட்டுமன்னார்கோவில் தாலுகா, அத்திப்பட்டுஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் சித்திராதேவிக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியினர் புவனகிரி அடுத்த கஸ்பாஆலம்பாடியில் வசித்து வந்தனர். சித்திராதேவி தற்போது இரண்டுமாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த 16ம் தேதி காலை வேலைக்கு சென்ற முரளிதாஸ், இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.

புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us