ADDED : ஏப் 12, 2026 04:15 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் போலீசார் தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடலுார் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 680 போலீசாருக்கு கடலுார் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு முன்னேற்பாடுகள் பணி நடந்து வருகிறது.
குறிப்பாக, தபால் ஓட்டு பதிவு செய்வதை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணி, தபால் ஓட்டு பெட்டிகள் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் 18, 20 ஆகிய தேதிகளில் தபால் ஓட்டு பதிவு செய்யப்படுகிறது.
