/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேணுகோபாலபுரம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
வேணுகோபாலபுரம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
வேணுகோபாலபுரம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
வேணுகோபாலபுரம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 20, 2025 12:42 AM

கடலுார்: கடலுார் வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தினமலர்-பட்டம் இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. வேணுகோபாலபுரம், ஸ்ரீவரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக திருக்குறள் பேரவையின் கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, உதவி தலைமைஆசிரியர்கள் கோபி, மணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.