/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சலா பதின்ம பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
அருணாச்சலா பதின்ம பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அருணாச்சலா பதின்ம பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அருணாச்சலா பதின்ம பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 16, 2025 01:16 AM

கடலுார் : குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார். செயலாளர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார்.
பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், பட்டம் இதழில் உள்ள அறிவுசார் கருத்துகளை படித்து மாணவர்கள் பன்முகத்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை அபிராமி நன்றி கூறினார்.