/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 21, 2025 12:47 AM

கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
கடலுார் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று கராத்தே பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரணவ மாறன், ஆசிரியர்கள் செல்லப்பன், ரமா பிரபா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.