/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 02, 2024 06:11 AM
பெண்ணாடம்: தாழநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சுற்றி தீவளூர், கோனுார், காரையூர், வடகரை, நந்திமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் 20 கி.மீ., துாரமுள்ள கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்டது.
இங்கிருந்து கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால் பெண்ணாடம் மற்றும் முருகன்குடி சென்று அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். இதனால் கர்ப்பிணிகள், தாய்மார்கள், முதியவர்கள், சிறுவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, கிராம மக்கள் நலன் கருதி, தாழநல்லுாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

