ADDED : நவ 21, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி இறந்தது குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த செம்பனார்கோவிலைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 58; இவர் செம்பனார் கோவில் போலீஸ்நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஆக.13ம் தேதி கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 11ம் தேதி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலுார் மத்திய சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

