sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்

/

விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்

விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்

விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்


ADDED : மே 29, 2025 03:32 AM

Google News

ADDED : மே 29, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன், மா. கம்யூ., கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு, ஒன்றிய செயலர் குருமரகுரு தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர் சந்திரசேகரன், ஜீவானந்தம், வழக்கறிஞர் சங்கரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள் பெரியசாமி, செல்வக்குமார், நெல்சன், செந்தில், கவிதா, விமலா, வேல்முருகன், கோவிந்தராஜ், சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், விருத்தாசலம் ஆலடி சாலையில் மின் விளக்கு அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை துார்வார வேண்டும். பெரியார்நகர் ஏ.சி., பயணியர் நிழற்குடையை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, நகராட்சி கமிஷனர் பானுமதியிடம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us