/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : நவ 16, 2025 03:32 AM

புவனகிரி: புவனகிரியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு காங்., கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஐயப்பன் கோவில் அருகில், காங்., கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத்தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார்.
மூத்த நிர்வாகிகள் லட்சுமணன், நாகராஜன், மாசிலாமணி, பாலமுருகன் முன்னிலை வாகித்தனர். மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நேரு படத்திற்கும், காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநில ஆலோசகர் செல்வகுமார், கட்சி நிர்வாகிகள் பெருமாள், மணிகண்டன், அரசன் அம்பேத், ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சட்டசபை தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத் நன்றி கூறினார்.

