/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்
ADDED : ஜன 15, 2024 06:36 AM

சிதம்பரம் : மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்ற சக்கர வாகனத்தை எம்.எல்.ஏ., பாண்டியன் வழங்கினார்.
சிதம்பரம் அடுத்த புதுக்குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் குபேந்திரன். ஆதிவராகநல்லுார் ஊராட்சி ராஜேந்திரன். மாற்றுத்திறனாளியான இருவரும் தங்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிட கோரி சிதம்பரம் பாண்டியன் எம்.எல்.ஏ., விடம் மனு அளித்தனர். அதையடுத்து, அவர்கள் இருவருக்கும் தனது சொந்த நிதியில், மூன்று சக்கர வாகனங்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன், ஒன்றிய கழக அவைத் தலைவர்கள் ரெங்கசாமி, கோவிந்தராசு, நிர்வாகிகள் சிவக்குமார், டேங்க் சந்தோஷ், ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.