ADDED : செப் 23, 2024 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். கிராம நிர்வாகி நாகலிங்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அமுதா ராஜேந்திரன் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.